வவுனியாவில் வீடு புகுந்து தாக்கி தங்க நகைகள் பணம் கொள்ளை: குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!

வவுனியா, புதுக்குளம் – தேவகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் நுழைந்த திருடர்கள் வீட்டிலுள்ளவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் வீடு ஒன்றில் சத்தமாக குறைத்துக்கொண்டிருந்த நாயை வீட்டினைத்திறந்து வெளியே விட சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த பத்திற்கு மேற்பட்ட திருடர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ளவர்களை தாக்கி, அணிந்திருந்த எட்டுப்பவுண் தங்க நகைகள் உட்பட பதினோராயிரம் ரூபா பணம் என்பனவற்றை கத்தி முனையில் கொள்ளையிட்டு, தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் குடும்பஸ்தரான 59 வயதுடைய சிறீஸ்கந்தவாசன் என்பவர் காயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் குறித்து தடயவியல் பொலிசார் வரவழைக்கப்பட்டு மோப்ப நாய் சகிதம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பூநகரி பிரதேச சபையின் பாதீடு வெற்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *