
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதியில் உள்ள வீடொன்றின் கூரைக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக, குறித்த வீட்டில் கூரை வேலை செய்ய முற்பட்டவேளை, இக் கைக்குண்டு இருந்ததை அவதானித்துள்ளனர்.
இதையடுத்து, வீட்டு உரிமையாளர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ள நிலையில், பொலிஸார் இக் கைக்குண்டை மீட்டுள்ளனர்.
இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
