
கொட்டதெனியாவ பிரதேசத்தில் காணாமல் போன சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டதெனியாவ – வத்தேமுல்ல, பண்டாரகொட பிரதேசத்தில் காணாமல் போன இரு சிறுவர்களும் 43 நாட்களுக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை மீரிகம பிரதேசத்திலுள்ள உணவகம் ஒன்றிலேயே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி இரண்டு சிறுவர்களும் காணாமல் போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது.
10 வயது மற்றும் 12 வயது சிறுவர்களே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.