எரிவாயு தட்டுப்பாடு: நட்சத்திர ஹோட்டலில் விறகு அடுப்புகள்!

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விறகு அடுப்பு பயன்படுத்தப்படுகிறது என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளாந்தம் மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில், கொழும்பில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக பிரதான ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட மேலும் சில ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவு தயாரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை இன்னும் இரண்டு மூன்று வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என எரிவாயு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

எரிவாயு தட்டுப்பாட்டை அடிப்படையாக வைத்து பல்வேறு பகுதிகளில் மோதல்களும் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் எரிவாயுகளவாடப் பட்டுள்ளன சில பகுதிகளில் எரிவாயு கொண்டு செல்லும் வாகனத்தின் சாரதி தாக்கப்பட்டு எரிவாயு பலாத்காரமாக பறித்துச் செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பறிபோகவுள்ள ஜோன்ஸ்டனின் அமைச்சு பதவி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *