மன்னாரில் எரிவாயு அடுப்பு வெடிப்பு: பெண் கூலி தொழிளாலியின் வீடு எரிந்து நாசம்!

மன்னார் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரவான் கோட்டை பகுதியில் இன்று நண்பகல் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

தரவான் கோட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டிலேயே மேற்படி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீடு முற்றுமுழுதாக எரிந்து நாசம் ஆகியதால், குறித்த பெண் அதிர்சியின் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசிப்பதுடன், பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கிராம மக்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.

மன்னார் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், நகரசபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மன்னார் மாவட்டத்திற்கு என தனியான ஒரு தீயணைப்பு ஏற்பாடு இன்மையால், இவ்வாறான பல தீவிபத்துக்கள் பாரிய சேதங்களை ஏற்பட்ட பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

எரிவாயு தட்டுப்பாடு: நட்சத்திர ஹோட்டலில் விறகு அடுப்புகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *