எரிவாயு எதிரொலி; கிராமப்புறங்களில் உள்ள காடுகள் அழியும் அபாயத்தில்..!

எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நிலவுவதால், கிராமப்புறங்களில் இருக்கும் காடுகள் அழியும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

எரிவாயு பிரச்சினை இன்னும் பல மாதங்களுக்கு நீடித்தால், எரிவாயுவுக்குப் பதிலாக விறகுகளைப் பயன்படுத்துவோரின் சதவீதம் அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

சமையல் எரிவாயு விலை உயர்வு, சந்தையில் எரிவாயு தட்டுப்பாடு, எரிவாயு கசிவால் ஏற்படும் வெடிப்பு ஆபத்துகள் போன்ற காரணங்களால் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் விறகுப் பயன்பாடு அதிகரித்துள்ளது.

விறகுகளைக் கண்டுபிடிப்பதற்காக மக்கள் காடுகளுக்குள் நுழைவதால், மரங்கள் மற்றும் கொடிகளின் சேதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமையல் எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அதனால் ஏற்படும் நடவடிக்கைகளின் பாதகமான விளைவுகளை எதிர்காலத்தில் காண முடியும் என மேலும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *