மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை இழந்த பசில்!

குஜராத் உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான வாய்ப்பை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இழந்துள்ளார்.

உலகளாவிய முதலீட்டாளர் உச்சி மாநாட்டின் 10ஆவது பதிப்பு குஜராதில் ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெற ஏற்பாடாகி இருந்த நிலையில், நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வருவதையடுத்து நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கும் இடையில் திட்டமிடப்பட்டிருந்த இருதரப்பு சந்திப்பும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், கடந்த ஆண்டு டிசம்பரில் பசில் ராஜபக்ச இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் டொலர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட முக்கிய நான்கு விடயங்களில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *