
சமூக மார்க்க நிறுவனங்களும் அவற்றுக்கு சொந்தமான வளங்களும் சமூக இருப்பின் அத்திவாரங்களாகும். இந்த அத்திவாரங்களை ஆட்டம் காணச் செய்யும் அல்லது முற்றாக ஒழித்தழிக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சமூகத்தின் எதிர்கால இருப்பையே நாசமாக்கிவிடும். எனவே தான் சமூக நிறுவனங்களுக்குரிய சொத்துக்களை பாதுகாப்பது எல்லோருடைய தலையாய கடமையாகும்.