
வூதி அரசாங்கம் இவ்வருடம் இலங்கையிலிருந்து 3,500 யாத்திரிகள் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டிலிருந்து புனித ஹஜ் கடமையினை மேற்கொள்வதற்காக ஏற்கனவே திணைக்களத்தில் 25,000 ரூபா பதிவுக் கட்டணத்தை செலுத்தி உறுதி செய்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் தீர்மானித்துள்ளன.