'திருகோணமலை எங்கள் சொத்து' பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பல்கலை மாணவர்கள் போராட்டம்…!

திருகோணமலை நகர் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் வேலியிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலப்பகுதியில் தாய்லாந்திலிருந்து பெளத்த துறவிகளது வருகையுடனான புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்படவிருப்பதாக குறிப்பிட்டு அதனை எதிர்க்கும் முகமாக இன்று மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் வட கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்பினை இந்த அரசானது உடன் நிறுத்த வேண்டும் தமிழர்களது பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியான பெளத்தமயமாக்கப்படும் நிலைமைகள் உடனடியாக தடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply