தமிழர் பகுதியில் அதிகாலையில் பஸ் மீது தாக்குதல் – நடத்துநர் காயம்..! samugammedia

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மீராவோடை வழியாக வாழைச்சேனை – அக்கரைப்பற்று செல்லும் பஸ் மீது தாக்குதல் நடாத்தியதில் நடத்துனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனையிலிருந்து இன்றையதினம் காலை மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச்சபையின் வாழைச்சேனை டிப்போவுக்குச் சொந்தமான பஸ் வண்டி மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் 18 ஆம் கட்டைப்பகுதியில் வைத்து அதிகாலை 5.10 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பஸ் வண்டியின் கண்ணாடிகள் வெடித்துச்சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார். 

இம்முறை கேடான தாக்குதலால் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கு அதிகாலை வேளையில் பயணம் செய்த பிரயாணிகள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்கொண்டனர்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *