தியாகதீபம் திலீபனுக்கு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக அஞ்சலி…!samugammedia

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று(26) காலை கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவித்ததை தொடர்ந்து அடையாள உண்ணாவிரதம் இடம்பெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *