ஜேர்மனிக்கு பயணமானார் ரணில்…!samugammedia

‘பேர்லின் பூகோள உரையாடலின்’ முதல் நாள் அரச தலைவர்களின் கலந்துரையாடல் அமர்வில் ஆரம்ப உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனிக்கு பயணித்துள்ளார். 

உலகளாவிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடுவதற்காக அரசியல், வர்த்தக மற்றும் சமூக ரீதியில் செல்வாக்கு மிக்கவர்கள் பங்கேற்கும் இந்த உச்சிமாநாட்டின் பின்னர் மாநாட்டில் பங்கேற்கும் அரச தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *