யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் கிராம அலுவலருக்கு நேர்ந்த கதி – இரு இளைஞர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு samugammedia

பெண் கிராம அலுவலரிடம் இருந்து பெருந் தொகைப் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றுள்ளது.

உரும்பிராய் சந்தி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பெண் கிராம அலுவலர் அணிந்திருந்த கைப்பையை, மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் கிராம அலுவலரால் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . 

கைப்பைக்குள் அலைபேசி மற்றும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பணம் இருந்தது என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *