யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில் இருந்து இன்றைய தினம் (08) வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கி என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் பாதுகாப்பு கடமையிலும் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவினை பெற்று குறித்த ஆயுதங்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.