கவினின் திருமணம் குறித்து  முதல் முறையாக மனம் திறந்தார் லொஸ்லியா!

பிக் பொஸ் சீசன்-3  நிகழ்ச்சியின் போட்டியாளர்களாகக்  கலந்து கொண்ட கவின் மற்றும் லொஸ்லியா காதலித்து வந்த நிலையில் அவர்களது காதல் முறிவடைந்தமை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து சமீபத்தில் கவின் தன்னுடைய நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், அண்மையில் லொஸ்லியாவிடம் கவினின்  திருமணம் குறித்து  பிரபல ஊடகமொன்று கேள்வியெழுப்பியிருந்தது.

இதற்கு பதில் அளித்த லொஸ்லியா ‘கவினின் வளர்ச்சி எனக்கு மிகவும்  மகிழ்ச்சி அளிக்கின்றது. அவரது குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக அமைந்துள்ளது . கவினின்  திருமணம் என்னை எந்த விதத்தில் பாதிக்கவில்லை, அவருக்கும் பாதிப்பு இருக்காது என்று நினைக்கிறேன்.

மேலும் ’பிக் பொஸ் நிகழ்ச்சி முடிந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது, இதுக்கு மேல் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்கள், இதை பற்றி பேச வேண்டாம் என்று நான் நினைக்கிறேன்’இவ்வாறு லொஸ்லியா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *