முக்கிய நாடொன்றின் இராஜாங்க அதிகாரிகளுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் திடீர் சந்திப்பு…!samugammedia

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சந்திப்பு யாழில் இன்று இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ், மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச் செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால், தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *