யாழில் பரிதாபம்…! மிதி வண்டியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு! samugammedia

மிதி வண்டியில் இருந்து தவறிவிழுந்த பருத்தித்துறையை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (10) உயிரிழந்துள்ளார்.

வெளிச்சவீட்டு வீதி பருத்தித்துறையை சேர்ந்த பிலிப்பு ராஜசிங்கம் (வயது-52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மிதிவண்டியில் ஏற்றி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கடந்த 7 ஆம் திகதி கொண்டு சென்றபோது தவறி கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினமே மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றைய தினம் (10) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த இறப்பு தொடர்பான மரண விசாரணையினை யாழ் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *