திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் உள்ள வீதியில் டிமோ பட்டா ரக வாகனமொன்று பிரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ் விபத்தில் பட்டா ரக வாகனத்தில் பயணம் செய்த ஈச்சிலம்பற்று -சூரநகர் பகுதியைச் சேர்ந்த மூவர் காயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சந்தைக்கு சென்று பொருட் கொள்வனில் ஈடுபட்டு வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனமே இவ் அனர்த்தத்தை எதிர் நோக்கியுள்ளதாக பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.