யாழில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த பெண் திடீரென உயிரிழப்பு…!samugammedia

யாழில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் சல்லியாவத்தை, பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கிச் சரிந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணை உடனடியாக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள். தெரிவித்துள்ளனர்.

67வயதான ஜெயேந்திரன் சோதிமலர் எனும் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் பருத்தித்துறை  மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *