கொழும்பில் அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பிய யாழ். முதியவர் மாயம்..! – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு samugammedia

 

யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று  அலுவல்களை நிறைவு செய்து விட்டு  திரும்பிய முதியவரை கடந்த திங்கட்கிழமை (23) ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முதியவர் கடந்த  திங்கட்கிழமை  கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று அங்கு  விசா அலுவல்களை நிறைவு செய்து விட்டு  ஆட்டுப்பட்டித் தெருவில் உள்ள விடுதி ஒன்றிற்கு  உறவினர்களுடன் திரும்பினார்.

பின்னர்,  அன்று  பிற்பகல் 3 மணியளவில் கடைக்குச் செல்வதாக தெரிவித்து விடுதியிலிருந்து புறப்பட்ட முதியவர் இன்று வரை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதியிலிருந்து புறப்பட்டுச் செல்லும் போது பட்டர் கலர் சேட் மற்றும் வேட்டி அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

எனவே இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0774354409 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் உறவினர்களால் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *