யாழ் போதனாவைத்தியசாலையில் இயங்கி வந்த வென்டிலேட்டர் இயந்திரம் பழுதடைந்து நிலையில் காணப்பட்டமையை கருத்தில் கொண்டு எஸ். கே. நாதன் அவர்கள் சுமார் 15 மில்லியன் ரூபா பெருமதியான வென்டிலேட்டர் (Venterlater) குழந்தைகளைபராமரிக்கும் சாதனம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வடமாகாண சுகாதார பணிப்பாளரும் யாழ் போதனாவைத்தியசாலையின் பணிப்பாளருமான வைத்தியர் சத்தியமூர்த்தி, வைத்தியர் ராகுலன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் விரிவுரையாளர் முருகானந்தன், தொழிலதிபர் சிவகுமார் மற்றும் வைத்தியசாலையில் நிர்வாக உத்தியோகத்தர்கள் தாதியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.