குழந்தையை பணயமாக வைத்து இளம் தாய் பாலியல் துஷ்பிரயோகம்…!samugammedia

இளம் தாயொருவர் மூன்று இளைஞர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த இளம் தாயை இளைஞர்கள் மூவர் வன்புணர்ந்துள்ளனர்.

இச் சம்பவம் பூகொடை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை அபகரித்த அந்த இளைஞர்கள் குழந்தையை தாக்கப் போவதாக அச்சுறுத்தி தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பூகொடை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பேரில் 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குழந்தையின் தாய் வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக உள்ள மற்றுமொறு சந்தேக நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *