இஸ்ரேலில் பணியாற்றியபோது ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கைப் பெண் அனுலா ரத்நாயக்கவின் பிரேத பரிசோதனை வெளியாகி உள்ளது.
அதில் அவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த பிரேத பரிசோதனையின் போது அனுலா ரத்நாயக்கவின் உடலில் தோட்டாக்கள் பல காணப்பட்டதாக
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது அவரது சடலம் களனியில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.