இலங்கை-துருக்கி நேரடி விமான சேவை இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்…! samugammedia

துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று(30) காலை துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இன்று காலை இலங்கையை வந்தடைந்த துருக்கி விமானத்திற்கு நீர் வணக்கத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அதில் வருகைதந்த பயணிகள் மற்றும் விமான அதிகாரிகளுகள் கட்டுநாயக்க விமான நிலைய உத்தியோகத்தர்களால் வரவேற்கப்பட்டதுடன் விமானசேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நேரடி விமான சேவையானது வாரத்தில் 4 நாட்கள் அதாவது திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் காலை 05.40 க்கு துருக்கியில் இருந்து கட்டுநாயக்க நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *