கொழும்பு – லாகூருக்கான விமான சேவைகள் தொடர்பான அறிவித்தல்…!samugammedia

கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் லாகூருக்கு இடையே வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கையை ஸ்ரீலங்கன் விமான சேவை 4ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாளை முதல் வாராந்தம் செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் குறித்த விமான சேவை முன்னெடுக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் லாகூர் செல்ல வாரத்துக்கு 900 பயணிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்  ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தினால் ஏற்கனவே, பாகிஸ்தானின் கராச்சிக்கு வாரந்தோறும் 4 விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *