திருமலையில் அதிகாலையில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள்…!விவசாயிகள் கோரிக்கை…!samugammedia

திருகோணமலை மாவட்டத்திலுள்ள தோப்பூர் பிரதேசத்தில் உள்ள நீணாக்கேணி வயல் வெளியில் செய்கைபண்ணப்பட்ட வேளாண்மைக்குள் இன்று அதிகாலை உள்நுழைந்த காட்டு யானைகள் வேளாண்மைகளை சாப்பிட்டு, மிதித்து துவம்சம் செய்து விட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகளின் தொல்லைகள் அண்மைக் காலமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும், தாம் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு செய்கின்ற வேளாண்மைகளை காட்டு யானைகள் துவம்சம் செய்வதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தமது வேளாண்மைச் செய்கையை பாதுகாக்க அரசாங்கம் யானை பாதுகாப்பு வேலி அமைத்தர முன்வர வேண்டுமென தோப்பூர்-நீணாக்கேணி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *