தேயிலைத் தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!samugammedia

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னன் தேயிலைத் தோட்டத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை (03 ம் திகதி) கண்டெடுக்கப் பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் சென்னன் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 46) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
அட்டன் இ.போ.ச டிப்போவில் பணிபுரிந்து வருவதாகவும், உயிரிழந்தவர் நான்கு நாட்களாக பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் சென்னன் தோட்டத்திற்கு அருகில் அட்டன் ஓயா பாயும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தை அட்டன் நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியாசாலைக்குச் கொண்டு செல்லப் படவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பில் அட்டன் குற்ற தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *