சீனாவில் உள்ள பெளத்த மக்களால் இலங்கை வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைப்பு! samugammedia

இலங்கை மற்றும் சீனா பெளத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பெளத்த மக்களால்  இலங்கையிலுள்ள  வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் இன்றைய தினம் வடமாகாணத்தில் பல பகுதிகளிற்கு விஜயம் செய்தார். அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் 500 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

இதில் முதல் கட்டமாக இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் வைத்து 50 பேருக்கு 7000 ரூபா பெறுமதிமிக்க உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில்  இலங்கைக்கான சீனத்துதுவர் Q.l சிங்சா மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர்,  தூதரக அதிகாரிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *