இருளில் மூழ்கியுள்ள ஐந்து இலட்சம் இலங்கையர்கள்..! வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia

 இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 500,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக இலங்கை மின்சார சபை (CEB) அவர்களின் மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளது.

மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த,

 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை பில்கள் செலுத்தப்படாமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நுகர்வோருக்கு 30 நாள் கடன் காலப் பயன்பாடும், தோராயமாக 10 நாட்களுக்கான அறிவிப்பும் வழங்கப்படுவதாகவும், அதன் பிறகு அவர்களின் இணைப்பு துண்டிக்கப்படுவதாகவும் நோயல் பிரியந்த விளக்கினார்.

மின்சார சபையின் பல்வேறு விதிமுறைகளுக்கு அமைவாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர் நிலுவைத் தொகையை செலுத்தியவுடன் மின் இணைப்பு மீள வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *