முல்லைத்தீவில் கனமழை…! வீதிகளில் ஒன்றுகூடிய மக்கள்…!samugammedia

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இன்று அதிகளவிலான மீன்கள் மீனவர்களால் பிடிக்கப்பட்டு வருகின்றது.

நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடாக முல்லைத்தீவு பெருங்கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்கால் பகுதியிலே கனமழை காரணமாக அதிகமாக மீன்கள் பிடிபட்டு வருகின்றது.

இவ்வாறு பிடிபடும் உயிர் மீன்களான கெழுத்தி, மணலை, சிலாப்பி இன வகையை சார்ந்த மீன்களே ஆகும். 

இந்நிலையில் குறித்த மீன்களை பொதுமக்கள் பார்வையிடுவதோடு, வலை வீசி மீன்களை பிடித்து வருகிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *