குருநாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு…!samugammedia

குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற குடும்பத்தினர் பயணித்த முச்சக்கரவண்டியுடன் பௌசர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சிறிபுர பிரதேசத்தைச் சேர்ந்த 19வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து கலேவெல நகர மையத்தில் இடம்பெற்றுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை உயிரிழந்த பெண்ணிற்கு நாளை (25) பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *