பிலிப்பைன்ஸில் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (72) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்ற நிலையில் அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.












இந்நிகழ்வில் திருமதி. அகிலத்திருநாயகி அவர்களது சாதனைகள் தொடர்பாக வாழ்த்துரைகள் இடம் பெற்றதுடன் நினைவுச் சின்னம் மற்றும் பணமுடிப்பு வழங்கியும் ,பொன்னாடை அணிவித்தும் கௌரவிக்கப்பட்டார்
குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) எஸ்.குணபாலன்,பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் லிங்கேஸ்வரன் , பிரதம கணக்காளர் ம.செல்வரட்ணம், சமுர்த்தி பணிப்பாளர் M.முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி க.ஜெயபவானி , பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் சண்முகலிங்கம் திருமதி. அகிலத்திருநாயகி அவர்களது ஆசிரியர் திருமதி.ஐயம்பிள்ளை என பலரும் கலந்துகொண்டனர்.











