வவுனியாவில் வாகன விபத்து – ஐந்து பேர் படுகாயம்! samugammedia

வவுனியாவிலிருந்து தேங்காய்களை ஏற்றி மதவாச்சி நோக்கி பயணித்த பார ஊர்தி  ஒன்று மோட்டார் சைக்கிளில்  பயணித்த மூன்று பேரை மோதித்தள்ளியது.

இந்நிலையில் தேங்காய்களை ஏற்றி பயணித்த வாகன சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகே விபத்துக்குள்ளாதில் வாகனத்தில் பயணித்த  இருவர் உட்பட  ஜந்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா  பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வவுனியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *