ஜனநாயக போராளிகள் கட்சியினால் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு….! samugammedia

ஜனநாயக போராளிகள் கட்சியினால் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று காலை 11: 00 மணியளவில் கரவெட்டியில் இடம் பெற்றது.

முதல் நிகழ்வாக மாவீரர்கள் பெற்றோர்கள் விதையிலிருந்து மங்கல வாத்தியம் முழங்க அழைத்துவரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் மண்டபத்தில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டி மலர்மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்டு மௌன வணக்கம் செலுத்தப்பட்டது.

ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தலமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழவில் ஜனநாயக கட்சியின் செயலாளர் துளசி உட்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சி முக்கியஸ்தர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *