சிறிகொத்தாவில் திடீரென ஒன்றுகூடும் ஐ.தே.க முக்கியஸ்தர்கள்…! வெளியான காரணம்…!samugammedia

எதிர்வரும் 2024ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என்பன நடைபெறவுள்ளதாக எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் முக்கிய கட்சிகள் தமது தேர்தல் வியூகங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

அந்தவகையில்  ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில்   நடைபெறவுள்ளது.
அதேவேளை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய அதிகாரிகள் சபையுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு இந்த புதிய நிர்வாக சபையும் தீர்க்கமான காரணியாக உள்ளதால், எதிர்வரும் ஆண்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான பாரிய பொறுப்பும் இந்த அதிகாரி சபைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி இன்றைய கலந்துரையாடல் முக்கியமான கலந்துரையாடலாக அமையும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *