சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த முதியவர்!

24 மணித்தியாலத்துக்கும் குறைந்த காலப்பகுதியில், துவிச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு – கொச்சிக்கடையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்து முதியவரொருவர் சாதனை படைத்துள்ளார்.

ரிச்சட் பெர்ணான்டோ என்ற 67 வயதுடைய முதியவர் ஒருவரே குறித்த சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்று முன்தினம்  மதியம் 12 மணியளவில் அவர் தமது பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் நேற்றுக் காலை 10.30 மணியளவில் அவர் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் அவர், தமது பயணத்தை நிறைவு செய்திருந்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *