மேற்படி விடயம் தொடர்பாக, வடமாகாண பிரதம செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக எதிர்வரும் டிசம்பர் 05 ம் திகதி கொண்டாடப்படவுள்ள உலக மண் தினத்தினை முன்னிட்டு A9 வீதியின் இருமருங்கிலும் சூழலை சுத்தப்படுத்துவத்துவதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பான முன் ஏற்பாட்டு கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (27)திங்கள் கிழமை, 2.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.