இலங்கை ஊடகவியலாளர் ப்ரெடி கமகேக்கு திமோர்- லெஸ்ட்டே விருது…!samugammedia

இலங்கையின் ஊடகவியலாளரும் மனித உரிமைப் செயற்பாட்டாளருமான ஃப்ரெடி கமகேவுக்கு நவம்பர் மாதம் 27ஆம் திகதி கிழக்குத் தீமோர் நாட்டின் ஜனாதிபதி ஜோஸ் ரமோஸ் ஹோர்டாவினால் திமோர் லெஸ்டே எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.

கிழக்குத் தீமோரின் சுதந்திரத்திற்கான பிரச்சாரத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும்முகமாக இந்தக் கௌரவம் அமைந்துள்ளது.

வேறொரு நாட்டின் பத்திரிகையாளர் ஒருவர் கிழக்கு திமோரின் தலைநகரில் பாராட்டப்படுவது இதுவே முதல் தடவையாகும். இது சமூக நீதிக்காக இடைவிடாத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ப்ரெடி கமகேவுக்கு மட்டுமின்றி, இதுபோன்ற பலருக்கும் கிடைத்த சிறப்பு மரியாதையாக இது கருதப்படுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *