எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவைகள்…! வெளியான அறிவிப்பு…!samugammedia

எதிர்வரும் மார்கழி மாதத்தில்  நீண்ட வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறையை முன்னிட்டு சில சிறப்பு புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் காங்கேசந்துறை  வரையிலும் கண்டியில் இருந்து பதுளை வரையிலும் இந்த விசேட புகையிரதம் சேவையில் ஈடுபடவுள்ளது.

மார்கழி மாதத்தில் நீண்ட வார இறுதி (சனி 23,ஞாயிறு 24, திங்கள் 25 கிறிஸ்துமஸ், செவ்வாய் 26 உடுவப் போஹோயா) ஆகிய நாட்களில் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *