இலங்கையில் மீண்டும் மின்வெட்டா..? மின்சார சபை வெளியிட்ட அறிவிப்பு..! samugammedia

 

திருத்தப்பணிகள் காரணமாக செயலிழந்த நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்தின் 3வது மின்பிறப்பாக்கி இன்றைய தினம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்மூலம், 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பிற்கு கிடைக்கப்பெறும் என அதன் ஊடக பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தொழிநுட்ப பிரச்சினை காரணமாக செயலிழந்த நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டாம் மின் பிறப்பாக்கியை, எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *