அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்க்குமாறு கோரி மூதூரில் ஆர்ப்பாட்டம்…!samugammedia

மூதூர் பிரதேசத்தில் உள்ள அதிபர், ஆசிரியர்கள் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்பாக இன்று(30)  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மூதூர் கிளை இதனை ஏற்பாடு செய்திருந்தது.

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டின் தீர்க்கும் வகையில் மூன்றில் இரண்டு பங்கினை உடனே வழங்கு ,பாடசாலை செலவுச் சுமையை பெற்றோருக்கு திணிக்காதே, கல்விக்கு 6 % வீத ஒதுக்கீடு செய், கல்வியை விற்பதை நிறுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

அதிபர் , ஆசிரியர்கள் சுலோகங்களை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *