பொலிஸாரின் சித்திரவதையில் உயிரிழந்த சித்தங்கேணி இளைஞன்…! நீதி வேண்டி யாழில் கண்டனப் போராட்டம்…!samugammedia

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த சித்தங்கேணி இளைஞனின் உயிரிழப்புக்கு நீதி கோரி யாழில் நாளையதினம்   கண்டனப் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்,

வட்டுக்கோட்டைப் பொலீசாரின் காட்டுமிராண்டித்தனமான சித்திரவதைகளால் படுகொலை செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸன் (அலெக்ஸ்) அவர்களின் மரணத்திற்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டைப் பொலீஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் எதிர்வரும் 03.12.2023 ஞாயிற்றுக் கிழமை பி.ப 3.00 மணிக்குக் கண்டனப் போராட்டம் வட்டுக்கோட்டைச் சந்தியில் நடைபெறவுள்ளது.

அனைவரும் திரண்டு எமது எதிர்ப்பைப் பதிவு செய்வோம்! சூநீதிக்கான குரலை ஓங்கி ஒலிப்போம்! என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *