சர்வதேச மண் தினத்தை முன்னிட்டு வலி வடக்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதியில் இரு வேறு நிகழ்வுகள் பிரதேச சபை செயளாளர் சுதர்சன் தலைமையில் இன்று (5) முன்னெடுக்கப்பட்டது.
மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் இடம்பெற்ற மர நடுகை செயற்திட்டத்திற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.
இதேவேளை வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட பலாலி வீதியோரங்களிலுள்ள பிளாஸ்டிக் , பொலித்தீன் சேகரிப்பு நடவடிக்கையும் இடம்பெற்றதுடன் கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் கழிவு சேகரிப்பு கொள்கலன்கள் முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இச் செயற்திட்டங்கள் பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், பொதுமக்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டது.