திரையரங்குக்கு வரும் முத்து

1995 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளியாகி இன்று பார்த்தாலும் சலிக்காத ஒரு திபை;படம் என்றால் அது முத்து திரைப்படம் தான் .

ரஜினிக்கு ஜோடியாக மீனா ஈடு கொடுத்து நடித்திருப்பார். ஆவரின் அழகும் , நடிப்பும் ரசிகர்களை தன் பிடியில் வைத்திருந்தது. இவர்களுடன் சரத்பாபு , ராதா ரவி , செந்தில் ,வடிவேலு , பொன்னம்பலம் , ஜெயபாரதி பெரும் திரை பட்டாளமே நடித்து வசூலை அள்ளி குவித்திருதந்தது.

ரஹ்மான் இசையமைத்த படங்கள் எப்படியும் பேசப்படும் அதிலும் இந்த படம் சொல்லவே தேவையில்லை . ஒருவன் ஒருவன் முதலாளி என் ஒரு பாடலே போதும் இன்று வரை வெற்றியின் உச்சத்தை தொடும் போது மனதிற்குள் எழும் டீபுஆ இந்த பாடல் தான். தில்லானா தில்லானா , குலுவாலில்வே , கொக்கு சைவ கொக்கு , விடுகதையா இந்த வாழ்க்கை என பாடல்கள் ஒவ்வொன்றும் காதோரம் பல கதை சொல்லி சென்றவையே. இன்று ட்ரெண்டாகும் மீம்ஸ்களில் விடுகதையா இந்த வாழ்க்கை பாடல் இல்லையென்றால் அதிசயம் .

இப்போது எதற்காக இந்த படத்தின் புகழ்ச்சி என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும்… முத்து திரைப்படத்தை தயாரித்த கவிதாலயா நிறுறவனம் மீண்டும் திரையிட போவதாக ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.டிசம்பர் 3ஆம் திகதி முத்து திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டதோடு இ டிசம்பர் 8ஆம் திகதி திரையரங்கில் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *