பாடசாலை புத்தகங்களில் கஞ்சா இலைகள்…! தேரர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்…!samugammedia

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் துரதிர்ஷ்டவசமான வேலைத்திட்டமொன்று  தற்போது இடம்பெற்று வருகின்றது. பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களில் பல்வேறு துஷ்பிரயோகப் படங்களைப் பயன்படுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் உள்ள அச்சகம் ஒன்றில் பாடசாலை மாணவர்களுக்காக பயன்படுத்தப்படும் பயிற்சிப் புத்தகங்களின் அட்டையில் படங்களாக “கஞ்சா இலைகள்” பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருளான இந்த மருந்துகளை சிறுவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமான செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சோபித தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *