யாழில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்! samugammedia

இன்றையதினம் சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். அந்தவகையில் இன்றையதினம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் மனித உரிமைகள் தொடர்பான வீதி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.

சட்டத்திற்கும் மனித உரிமைக்கான நிலையத்தின் ஏற்பாட்டில் செம்முகம் ஆற்றுகைக் குழுவினரால் இந்த விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது.

இந்த நாடகத்தில் பொலிஸ் நிலையத்தில் நடக்கும் சித்திரவதைகள், வேலை செய்யும் இடத்தில் நடக்கும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான காட்சிகள் காண்பிக்கப்பட்டதுடன் அதற்கான தீர்வும் நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது.

இதில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் இயக்குனர் சட்டத்தரணி அம்பிகா சிறீதரன், அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *