பதுளையில் பாரிய மண்சரிவு – மயிரிழையில் காப்பற்றப்பட்ட 97 பேரின் உயிர்..! காணாமல்போன ஆறு வீடுகள்!

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொஸ்லந்த கலிபானவெல பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கலிபனாவல அஸ்வெத்தும மலையின் பாரிய பகுதி சரிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும்,

இருபத்தைந்து குடும்பங்களைச் சேர்ந்த 97 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆறு வீடுகள் வரை  தெரிவிக்கப்படுகிறது.

இந்த மண்சரிவினால் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதுடன்,

நெற்பயிர் ஒன்றும் மண்சரிவில் மூழ்கியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதுவரை 6 வீடுகள் காணமல் போயுள்ளதாகவும், இடிபாடுகள் மேலும் கீழுமாக நகர்ந்து ஏனைய வீடுகள் மூழ்கியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *