தொடரும் அஞ்சல் அலுவலக ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பு போராட்டம்…! மக்கள் அவதி…!samugammedia

தோப்பூர் அஞ்சல் அலுவலக ஊழியர்கள் நேற்றுமாலை ஆரம்பித்து அடையாள பணிபகிஷ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை (11) யும் முன்னெடுக்கப்பட்டது.

இதனால் தோப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு சேவை வழங்காது மூடப்பட்டுக் காணப்பட்டது.

நுவரெலியா உள்ளிட்ட தபால் நிலையங்கள் விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும், ஊழியர்களுகான சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் ஆரம்பமான இவ் அடையாள பணிபகிஷ்கரிப்புப் போராட்டம் நாளை நள்ளிரவு வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *