கிளிநொச்சியில் சீரற்ற காலநிலைகாரணமாக இதுவரை 394 குடும்பங்களைச் சேர்ந்த 1234 பேர் பாதிப்பு…!samugammedia

தற்பொழுது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பான இன்றைய இனம் 15.12.2023 கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையிலான அனர்த்த முகாமைத்துவ கலந்துரையாடல் அவசர இன்றைய தினம் நடைபெற்றது .

குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் போலீசார் இராணுவத்தினர்  வளைய கல்வி பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய தின கலந்துரையாடலில் தற்பொழுது திடீர் ஏற்பட்டுள்ள அதிக மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான  குளமான இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 34 சடுதியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அன்றைய தினம்   நீர் உயர்ந்தது அடுத்து 14வான் கதவுகள் திறந்து விடப்பட்டு குளத்தின் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதுடன் தொடர்ச்சியாக மலை அதிகரிக்கப்படுமானால்  குளத்தின் அண்டிய பகுதிகள் அதன் நீர்வரத்துபகுதிகளின் இருக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென கோரியுள்ளனர்.

மேலும்  தற்பொழுது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக 394 குடும்பங்களைச் சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் தற்காலிகமாக உறவினர்களிடம் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உலர் உணவு வழங்குவதற்காக பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *